திருவண்ணாமலை, அக்.16: திருவண்ணாமலை அருகே பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ₹2.50 லட்சம் ரொக்கம், 6 சவரன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் ஆதமங்கலம்புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர்.அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது.