திருவில்லிபுத்தூர், அக். 16: திருவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பானது. 24 மணி நேரமும் சிறிய அளவிலான வாகனங்கள் முதல் மிகப்பெரிய அளவிலான கண்டெய்னர் லாரிகள் உட்பட ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன.ஏராளமான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துக்களை குறைக்கவும் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை மடவார்வளாகம் அருகே செல்லும் பாதையில் கண்மாய் கரையை உயர்த்தி தடுப்புச்சுவர் கட்டி சாலையை அகலப்படுத்தப்பட்டது.