திருவண்ணாமலை, அக்.1: திருவண்ணாமலை மகான் சேஷாத்திரி ஆஸ்ரமத்தின் இடைக்கால நிர்வாகியாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன் பொறுப்பேற்றார். திருவண்ணாமலையில் உள்ள மகான் சேஷாத்திரி ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில், நிதி நிர்வாக கணக்குகள் முறையாக பராமரிக்கவில்லை, முறைகேடுகள் நடந்திருக்கிறது என பிரகாஷ் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணை விரைவாக நடைபெறவில்லை என்பதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதன்படி, ஆஸ்ரம நிர்வாகி முத்துகுமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணை நடத்தியது.