திருவண்ணாமலை, அக்.1: திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதுகுறித்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 120 அமைப்பாளர், 150 சமையலர், 239 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. அமைப்பாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்டி பிரிவினர் 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. சமையலர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்டி பிரிவினர் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.