செய்யாறு, செப்.29: செய்யாறு ஆற்றுப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து, தகவலறிந்த செய்யாறு சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.