திருப்பூர், செப் 25: வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி திராவிடத் தமிழர் கட்சியினர் திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடத் தமிழர் கட்சியினர் சார்பில் திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார்.