திருச்சி, மார்ச் 18: குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சி உழவர் சந்தையில் முஸ்லிம்கள் 29வது நாளாக நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.