வேட்டவலம், மார்ச் 18: ஆம்லெட் கேட்டு தகராறு செய்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். வேட்டவலம் அடுத்த காட்டுவேளானந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவரன். ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த 15ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த பாபு(22), சோமாஸ்பாடி கோயில்மேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(25), சுஜித்(20), கீழ்நாச்சிப்பட்டு விஜயச்சந்திரன்(21), சின்னராசு ஆகியோர் குடிபோதையில் சாப்பிட வந்தனர். அப்போது பாபு, ரகுவரனை ஆபாசமாக பேசி ‘எனது நண்பர்களுக்கு ஆம்லெட் போட்டு கொடு' என கூறினாராம். அதற்கு ரகுவரன், ‘பரோட்டா போட்டுக் கொண்டு இருக்கிறேன். சிறிது நேரத்தில் ஆம்லெட் கொடுத்துவிடுகிறேன்' என்றாராம்.