காரைக்குடி, மார்ச் 18: காரைக்குடியில் ஒரு வாரமாக குப்பைகளை அள்ளாததால் பொதுமகக்ளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். ஒவ்வொரு வார்டிலும் 20க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரி வீடு, வீடாக சென்று வண்டிகளில் குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பின்னர், அதை ஒவ்வொரு வீதிகளிலும் வைக்கப்பட்டிருக்கும் பெரிய குப்பை தொட்டிகளில் குவித்து, லாரிகள் மூலம் காரைக்குடி ரஸ்தா பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கம்.