தாராபுரம். மார்ச் 18: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியால் தாராபுரம் மாரியம்மன் கோயில் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தாராபுரம் மாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா மற்றும் கட்டளை தாரர் நிகழ்ச்சிகள் 30 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு விழா நேற்று துவங்கி வரும் 1ம் தேதி வரையும் அதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு கட்டளைதாரர்கள் நிகழ்ச்சிகளும் என 30 நாட்களுக்கு கோவில் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.