ஊட்டி, மார்ச் 18: நீலகிாியில் உள்ள 6 வட்டங்களில் வரும் 20ம் தேதி வருவாய்த்துறை சார்பில் சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. நீலகிாி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில் முதியோர் ஓய்வூதிய தொகை, விதவை உதவித்ெதாகை, நலிந்தோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை மற்றும் வருவாய்த்துைற மூலம் வழங்கப்படும் சான்றுகள், ேரஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுத்துறை சார்ந்த குறைகள் கேட்கப்பட்டு நிவர்த்தி ெசய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு சிறு தொழில் உதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 20ம் தேதி நீலகிாி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது.