சத்தியமங்கலம், மார்ச் 18: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அரசுப்பணியாளர்கள் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் 41 நாள் பயிற்சி பெற வேண்டும் என்பது விதிமுறை. இந்த பயிற்சி பெற்றால்தான் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.