திருப்புத்தூர், மார்ச் 17: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம், பள்ளித் தாளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். பள்ளிச்செயலர் குணாளன் வரவேற்றார். கலெக்டர் ஜெயகாந்தன், அரசுத் தேர்வில் முதலிடம் பெற அறிவுரைகள் வழங்கி பல்வேறு போட்டிகளிலும், தேர்வுகளிலும் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கினார். தொழிலதிபர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வெள்ளையன்செட்டியார், கவிஞர்ஜோதிராஜா, முன்னாள் வட்டாட்சியர் நாகராஜன், ஒன்றியக் கவுன்சிலர் பாக்கியலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.