கொடைக்கானல், மார்ச் 17: கொடைக்கானலில் டி.எம்.ஐ தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தினவிழா நடந்தது. கொடைக்கானலில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு டிஎம்ஐ தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தினவிழா நடந்தது. முன்னதாக ஏரி சாலை பகுதியில் இருந்து பேரணியாக 7 ரோடு, அண்ணாசாலை வழியாக ஆதித்தனார் திருமண மண்டபம் வரை பேரணி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியை கீஸ் தொண்டு நிறுவன அமைப்பாளர் மோகன் கொடியசைத்து துவங்கிவைத்தார்.