தா.பழூர், மார்ச் 17: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு ஏற்படும் விதமாக கபடிபோட்டி நடைபெற்றது.ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. சிந்தாமணி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் போட்டி நடைபெற்றது. சிந்தாமணி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் உள்ள இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். விளையாடுவதற்கு வயது, எடை கட்டுப்பாடு கிடையாது இளைஞர்கள், ஆண்கள் என இருபிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது.