ஓசூர், மார்ச் 17: ஓசூர் பூ மார்கெட்டிற்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என ப்ளவர் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓசூர்நகரானது தமிழக, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. ஓசூர் பூ மார்க்கெட்டில் ரோஜா, ஜர்பரா மற்றும் பட்டன்ரோஸ், சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் விற்பனை நடந்து வருகிறது. ஓசூர் மாநகரப்பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பூ வியாபாரிகள் வந்து செல்கின்றனர். எனவே, பூ மார்க்கெட்டுக்கு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என ப்ளவர் மார்க்கெட் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.