திருவண்ணாமலை, மார்ச் 17: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குளத்தினை தூர்வாரும் பணியில் அரசு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் 72 பேர் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கிரிவலப்பாதை அபயமண்டபம் அருகே உள்ள பாழடைந்த குளத்தினை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
கல்லூரி முதல்வர் பாண்டியன் பணியை துவக்கி வைத்து பேசுகையில், ‘நீர் நிலை பகுதியினை பாதுகாத்து மழை காலங்களில் தண்ணீர் சேகரிப்பதன் மூலம் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் வேளாண் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து சேதமடைந்துள்ள மற்றும் சீரமைக்கப்படாமல் உள்ள் நீர் நிலைகளை தூர்வாரி அதனை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.