மஞ்சூர், மார்ச் 13: மேரக்காய்க்கு ஓரளவு நல்ல விலை கிடைத்து வந்தாலும் வறட்சியால் விளைச்சல் பாதித்திருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் தேயிலை விவசாயத்துடன் ஏராளமானோர் மேரக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலி இடங்களிலும் மற்றும் தேயிலை தோட்டங்களில் மிகப்பெரிய அளவில் பந்தல்களை அமைத்து மேரக்காய்களை பயிரிட்டுள்ளனர். விளைந்த மேரக்காய்களை அறுவடைக்கு பின் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக சென்றும் மேரக்காய்களை கொள்்முதல் செய்து வருகின்றனர்.