புதுச்சேரி, மார்க் 12: புதுச்சேரி என்ஆர்எச்எம் ஊழியர்கள் 48 மணி நேரத்துக்குள் போராட்டத்தை திரும்ப பெறாவிட்டால் முன்னறிவிப்பு இன்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநரும், என்ஆர்எச்எம் இயக்குநருமான மோகன்குமார், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்ஆர்எச்எம் ஊழியர்களுக்கு அனுப்பிவுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையில் ேதசிய சுகாதார இயக்ககத்தின் பணியாளர்கள் கடந்த 2ம் தேதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சம வேலை, சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை கொடுக்கும்போது, அவர்களுக்கான ஊதியம், போனஸ் உட்பட அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.