புதுச்சேரி, மார்ச் 12: புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு சிறப்பு கூறு நிதியிலிருந்து ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சங்கம் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவிகள் 150 பேருக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு மதிய ஷிப்ட் வரும் 100 ஏழை மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: இக்கல்லூரியில் பயிலும் 5 சதவீத ஏழை மாணவிகளுக்கு மட்டும் உணவு வழங்கப்படு|கிறது. உணவு விஷயத்தில் ஏழை, பணக்காரர் என்று பிரித்து பார்க்க கூடாது. இருப்பினும், கல்லூரியில் பணியாற்றும் முன்னாள் மாணவிகள் தங்களது சம்பளத்திலிருந்து இத்திட்டத்தை தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது. புதுவையில் நிதி பிரச்னை உள்ளது.