ஆத்தூர், மார்ச் 12: ஆத்தூரில் வீட்டின் முன்பு நின்றிருந்த மூதாட்டியிடம், போலீஸ் எனக்கூறி நூதன முறையில் 10 பவுன் செயினை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் காந்தி நகரில் வசிப்பவர் வசந்தா(50). இவர் நேற்று காலை 9 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், வசந்தாவிடம் தாங்கள் போலீஸ் எனவும், அப்பகுதியில் தனியாக நடந்தும் செல்லும் பெண்கள் மற்றும் வீட்டின் வெளியில் நிற்கும் பெண்களிடம் செயின் பறிப்பு நடப்பதை கண்காணிக்க வந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும், வசந்தா அணிந்திருந்த செயினை கழட்டி பத்திரமாக பையில் வைத்துக்கொள்ளும்படி தெரிவித்தனர். இதை நம்பிய வசந்தா, தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை கழற்றி, பையில் வைத்துள்ளார்.