குமாரபாளையம், மார்ச் 12: குமாரபாளையம் நகராட்சி பகுதியில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. குமாரபாளையம் நகராட்சி பகுதியில், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பணியில் 60 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று பள்ளிபாளையம் பிரிவு ரோடு, ஆனங்கூர் சாலை, பேருந்து நிலையம், எடப்பாடி சாலை, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட10 இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெளியில் சென்றால் வீட்டுக்குள் நுழையும் முன்பு கைகால்களை சுத்தமாக கழுவ வேண்டும். மிளகு, மஞ்சள், பூண்டு போன்ற எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும்.