மதுரை, மார்ச் 12: கான்சாபுரத்தில் சேதமடைந்ததை மாற்றி புதிய தேவர் சிலை திறக்க அனுமதிக்குமாறு கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுக சாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் கடந்த 1999ல் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்த நிலையில், சிலை சேதமடைந்தது. இதனால், சேதமடைந்த சிலையை மாற்றிவிட்டு புதிதாக வேறு சிலை வைக்க முடிவானது. இதற்கு அனுமதி கோரி கடந்த 31.3.2017ல் விருதுநகர் கலெக்டர் மற்றும் சிவகாசி ஆர்டிஓ ஆகியோரிடம் மனு அளித்தோம்.
கலெக்டரின் விசாரணையில் ஆஜராகி தேவையான விளக்கம் அளித்தோம். அவர்கள் விதித்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டது. தற்போது சிலை அமைக்கும் பகுதி முழுமையாக பாதுகாப்பாக வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கலெக்டர் அனுமதி வழங்கவில்லை. எனவே, கான்சாபுரத்தில் தேவர் சிலை வைப்பதில் அதிகாரிகள் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.