திருச்செந்தூர், மார்ச் 11: திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 12ம் நாளையொட்டி மலர்கேடய சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா கடந்த பிப். 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 11ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை சிவன் கோயிலில் இருந்து புறப்பட்ட சுவாமி, அம்பாள் சன்னதி தெரு யாதவர் மண்டகப்படியை சென்றடைந்ததும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.