வருசநாடு, மார்ச் 11: வருசநாடு அருகே தினகரன் செய்தி எதிரொலியாக மலைகிராமத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வருசநாடு அருகே உள்ள காமராஜபுரம் மலை கிராமம். இங்கு தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த ஆறு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இது குறித்து சில தினங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதன் எதிரொலியாக தற்பொழுது புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.