மதுரை, மார்ச் 11: 100 நாள் வேலை வழங்கக்கோரி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். தேசிய ஊரக வேலையுறுதி திட்டத்தில் 250 நாட்கள் வேலை வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப ரூ.600 ஆக சம்பளத்தை உயர்த்த வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியத்தை வழங்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுரலகத்தில் மனு கொடுக்கும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.