நத்தம், மார்ச் 11: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவையொட்டி நேற்று பூக்குழி திருவிழா நடந்தது. இதைதொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நத்தம் பெரிய விநாயகர் கோயில் திடலில் அறுசுவை உணவு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. வேம்பார்பட்டி அரசு மேல்நிலைபள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி, சட்ட ஆலோசகர் சேக்சிக்கந்தர் பாட்சா, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.