வருஷநாடு, மார்ச் 6: வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசனூத்து, சாந்திபுரம், புதுக்கோட்டை, கோரையூத்து, பள்ளத்தூர், சின்ன சாந்திபுரம், காந்திபுரம், வெள்ளிமலை, உட்பட்ட 25க்கும் மேற்பட்ட மலை கிராமத்தில் பஸ் வசதி வேண்டி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் போன்ற வாகனங்களில் அதிக கட்டணம் ரூ.50 முதல் ரூ.100 வரை கொடுத்து பொதுமக்கள் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்நிலையில் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்வதற்கும் தேனி, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர் போன்ற பகுதிகளுக்கு விவசாய விளை பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் நிலவி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.