தொமுச சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா

சிவகங்கை, மார்ச் 6:  சிவகங்கை மின்வாரிய அலுவலகம் முன் சிவகங்கை கோட்ட தொமுச சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா நடந்தது. செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தலைவர் ராமமூர்த்தி தொழிற்சங்க கொடியேற்றி பேசினார். மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நிர்வாகிகள் பேசினர். இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், சரவணன், உத்தாண்டி, சாந்தி, ஓய்வு பெற்ற அலுவலர்கள் பில்லப்பன், காளிமுத்தன், என்.பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: