காங்கயம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிக்கு ரூ.15 லட்சத்தில் மிதி வண்டி, குப்பை கூடைகள்

காங்கயம், மார்ச்.6: காங்கயம் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்ட தூய்மை காவலர்களுக்கு, 77 மூன்று சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.காங்கயம் ஒன்றியத்தில் உள்ள, 15 ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக தூய்மை காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கிராமப்பகுதில் குப்பைகளை சேகரித்து அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்கும் பணிகளை செய்கின்றனர். இதற்காக காங்கயம் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிக்கும் ரூ.15,29,290 மதிப்பில் 77 மூன்று சக்கர வண்டிகளும், 359 குப்பை கூடைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

Related Stories: