திருவள்ளூர்: திருவள்ளூரில் விபத்துகளை குறைக்கும் வகையில் முதல் கட்டமாக பள்ளி பகுதிகளில் சாலையில் சிகப்பு, வெள்ளை நிற பெயின்ட் அடித்து விபத்து பகுதியாக எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் மாவட்ட தலைநகரான திருவள்ளூருக்கு பல்வேறு வெளி நிமித்தமாக தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இதனால் திருவள்ளூர் நகரம் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது. இது ஒருபுறம் என்றால், இருக்கும் பரபரப்புக்கு இணையாக சாலை விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதை சற்று குறைக்கும் நோக்கோடு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.அதன்படி, அவரது உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் விபத்துப் பகுதிகளை கணக்கிட்டு அந்தப் பகுதிகளில் சாலையில் 100 மீட்டருக்கு முன்பாக வேகத்தடை அமைத்துள்ளனர்.