தூத்துக்குடி, மார்ச் 5: தூத்துக்குடியில் நடந்த பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி முடுக்குகாடு பகுதியைச் சேர்ந்த பலவேசமுத்து மகன் சக்திவேல் (26). இவரும், இவரது நண்பரான சவேரியார்புரத்தை சேர்ந்த மாரிக்கண்ணுவும் (30) தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த இருநாட்களுக்கு முன்னர் இரவு, இவர்கள் இருவரும் பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.