ராஜபாளையம், மார்ச் 5: ராஜபாளையம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பிஏசிஎம் மேல்நிலைப் பள்ளி மற்றும் பிஏசிஆர் அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 476 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ராம்கோ குரூப் பிஏசிஆர் சேதுராமம்மாள், டிரஸ்டி சாரதா தீபா தலைமை வகித்தார்.