திருவில்லிபுத்தூர், மார்ச் 5: திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் வங்கி ஒன்றின் பின்புறம் ஒரு கிணறு உள்ளது. படி இல்லாத அந்தக் கிணற்றில் மூதாட்டி ஒருவரின் பிணம் மிதப்பதாக திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு மம்சாபுரம் காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். திருவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கயிறு கட்டி சுமார் ஒரு மணி நேரம் போராடி மிதந்து கிடந்த மூதாட்டி உடலை மீட்டனர்.