வத்தலக்குண்டுவில் குடும்ப தகராறில் ஊழியர் தற்கொலை

வத்தலக்குண்டு, மார்ச் 5: வத்தலக்குண்டுவில் குடும்ப தகராறில் விஷம் குடித்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

வத்தலக்குண்டு காமராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டமூர்த்தி (40). திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி உமாமகேஸ்வரி. 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டமூர்த்தி சம்பவத்தன்று நிறுவன ஊழியர்கள் தங்குமிடத்தில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி உமாமகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: