தண்டராம்பட்டு, மார்ச் 5: தண்டராம்பட்டு அருகே கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தண்டராம்பட்டு அடுத்த தென்கரிம்பலூர், சேர்ப்பாபட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர், தென்கரிம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். திமுக ஆட்சி காலத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்தபோது, இந்த வங்கியில் ₹2 கோடி வைப்பு நிதியாக வைக்கப்பட்டது. மேற்கண்ட 2 கிராமங்களில் இருந்து 35 குழுக்களின் பெயரில் ₹1 கோடி எடுக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் பெயரில் போலியாக பதிவு செய்து நகைக்கடன் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ஆகியோரிடம் விவசாயிகள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.