வருசநாடு, மார்ச் 4: தங்கம்மாள்புரம் அருகே, வயிற்று வலியால் விவசாயி பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தங்கம்மாள்புரம் அருகே, கோயில் பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சதுரகிரி (30). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அங்கு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.