புதுச்சேரி, மார்ச் 4: காரைக்கால் என்ஐடியில் கடந்த 28ம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். பின்னர் அன்று மாலை புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், புதுச்சேரி பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட சிலரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் அவரை தடுத்து நிறுத்தி தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி பாலாஜி வத்சவாவை சந்திக்க பாஜகவினர் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது.