காஞ்சிபுரம், மார்ச் 3: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம், கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தங்க மான், சந்திரப்பிரபை, யானை, ஹம்ஸ வாகனம், நாகம், தங்கக் கிளி, குதிரை, வெள்ளிரதம், தங்க சிம்மம், சூரிய பிரபை, தங்க பல்லக்கு, முத்து சப்பரம், சரபம் ஆகிய வாகனங்களில் காமாட்சி அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்று காமாட்சி அம்மன் தங்க சூரிய பிரபையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தியாகராஜன், கோயில் நிர்வாக அலுவலர் நாராயணன், பரம்பரை தர்மகர்த்தாவின் கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.