சென்னை: திருப்போரூர் - நெம்மேலி இடையே சாலையோரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டும் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் - நெம்மேலி இடையே 3 கிமீ தூரத்துக்கு சாலை அமைந்துள்ளது. இச்சாலையின் இருபுறமும் உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்துக்கு செல்ல பல்வேறு இடங்களில் குறுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது உப்பள ஒப்பந்தம் முடிந்து விட்டதால், கடந்த 6 ஆண்டுகளாக இங்கு உப்பு உற்பத்தி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் குப்பை கழிவுகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, இந்த சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.