சேலம், மார்ச் 3: சேலம் ஆவின் பொதுமேலாளரை, அண்ணா தொழிற்சங்க தலைவர் அடிக்க பாய்ந்ததால் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் இரும்பாலை ரோட்டில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் பொதுமேலாளராக விஜய்பாபு பணியாற்றி வருகிறார். இதில் அண்ணா தொழிற்சங்க தலைவர் கணேசன் என்பவர் பணி செய்கிறார். இவர் ஆவினில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவர் சரியாக வேலைக்கு வராமலும், பணி செய்யாமலும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இது குறித்து ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு, கணேசனிடம் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளனர். நீங்கள் சரியாக வேலை செய்வதில்லை என கேட்டுள்ளார். அப்போது ‘இதை கேட்க நீ யார்’ என்ற கணேசன், விஜய்பாபுவை அடிக்க பாய்ந்தார். இதனால் அங்கு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.