காவேரிப்பட்டணம், மார்ச் 3: செட்டிமாரம்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து திருப்பதிக்கு சென்றனர்.
காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரம்பட்டி கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமக்கள் விரதமிருந்தது திருப்பதிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று 15க்கும் மேற்பட்ட பஸ்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு சென்றனர். ஊர் கவுண்டர் மாரியப்பன் தலைமை வகித்து பக்தர்களை அழைத்து சென்றார்.