பண்ருட்டி, மார்ச் 3: பண்ருட்டி அருகே பெரியகாட்டுப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் வகுப்பறைகள் சேதமடைந்து இருந்தன. புதிய வகுப்பறை கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதன்பேரில் சபா.ராஜேந்திரன் எம்எல்ஏவின் தீவிர முயற்சியால் எல்எல்சி இந்திய நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் முதல்கட்டமாக 3 வகுப்பறைகள் ரூ.30 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் அடிக்கல்நாட்டு விழா நடந்தது. என்எல்சி முதன்மை பொதுமேலாளர் மோகன் முன்னிலையில் சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் பூமி பூஜை நடந்தது.