42 வேகன்களில் சென்றது தி.பூண்டி அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு திமுக எம்எல்ஏ ஆறுதல்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 3: திருத்துறைப்பூண்டி அருகே அதிரெங்கம் புதுத்துதெரு பின்புறம் உள்ள ஆற்றங்கரை தெருவை சேர்ந்த அய்சாபீவி என்பவரது கூரை வீட்டில் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த ஷாஹிரா ஆகியோரது இரண்டு கூரை வீடுகளுக்கும் பரவி முற்றிலும் எரிந்து சாம்பலானது. பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு அரசால் வழங்கபடும் ரூ.5 ஆயிரம் மற்றும் பொருட்களை துணை தாசில்தார் வசுமதி வழங்கினார். பாதிக்கபட்ட குடும்பங்களை திமுக எம்எல்ர ஆடலரசன் பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரண உதவிதொகை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: