(தி.மலை) விவசாய கடன் அட்டை விநியோகம் கண்ணமங்கலம் கூட்டுறவு வங்கி சார்பில்

கண்ணமங்கலம், மார்ச் 3: கண்ணமங்கலம் கூட்டுறவு வங்கி சார்பில் விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டது. கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பூங்கொடி திருமால் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.டி.குமார், மேற்கு ஆரணி வேளாண்மை குழு இயக்குனர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். செயலாளர் குருநாதன் வரவேற்றார். கூட்டத்தில், விளைபொருட்களை பதனிடுதல், கல்வி, சுகாதாரம் மற்றும் மத்திய அரசின் விவசாய கடன் அட்டை பெறுவதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டைகளை சங்க தலைவர் பூங்கொடி திருமால் வழங்கினார். இதில் சங்க இயக்குனர்கள் பாஞ்சாலி ஜெயபால், புஷ்பராஜ், சங்க பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: