கந்தாவகோட்டை, மார்ச்2: கந்தா–்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மோகனூர் கிராமத்தில் உள்ள ேமல்நிலை நீர்தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கந்தா–்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மோகனூரில் மேல்தேக்க குடிநீர் தொட்டி கட்டி பல வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் 2012-13ல் தொட்டி பழுது பார்க்கவும், பராமரிப்பு திட்டத்தில் பராமரிக்கப்பட்டது.