நெய்வேலி, மார்ச் 2: நெய்வேலி அடுத்த கோட்டேரி ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளி எதிரே சுமார் 10 ஏக்கர் சுற்றளவு கொண்ட தாமரை குளம் உள்ளது. இந்த குளம் கோட்டேரி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. இந்த குளத்தை கடந்த சில வருடங்களுக்கு முன், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளத்தில் ஆகாய தாமரை செடிகள் முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளதால் குளத்தின் தண்ணீரை கிராம மக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.