நெய்வேலி, மார்ச் 2:நெய்வேலி தொமுச பேரவை அகில இந்திய இணை பொது செயலாளர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் ஒன்றிணைந்தபோது அங்கீகாரம் பெற்ற சங்கமான தொமுச சங்கம் தொழிலாளர்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையை துவக்கி பேசியது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டங்களை முன்னெடுத்து வேலை நிறுத்தம் வரையில் சென்றது. இவைகளை கருத்தில் கொண்டு தொமுச இரண்டு தரப்பிலும் ஏற்படக்கூடிய இழப்புகளை விளக்கி தொழிற்சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு போச்சுவார்தையில் ஈடுபட்டு வெற்றி கண்டது.