கிருஷ்ணகிரி, மார்ச் 2: கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் ராணுவ வீரரை தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த கள்ளக்குறி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(41). ராணுவ வீரர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் மாலை கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் நின்றிருந்த ஒருவருக்கும், சுதாகருக்கும், வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும், மது பாட்டிலால் சுதாகரை தலை, கை, கால்களில் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த சுதாகர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் எஸ்ஐ ஜெய்கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.