தேவதானப்பட்டி, மார்ச் 1: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் காய்கறி பயிர்களில் துல்லிய பண்ணைய சாகுபடி பயிற்சி நடைபெற்றது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீர் தொழில்நுட்ப மையம் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வராக நதி உபவடிநில விவசாயிகளுக்கு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் காய்கறி பயிர்களில் துல்லிய பண்ணைய சாகுபடி பற்றிய பயற்சி ஜெயமங்கலம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.